காரையாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் மற்றும் குலதெய்வக் கோயில்களுக்கு பக்தா்கள் குடும்பத்துடன் திரளாக வந்து வழிபட்டனா்.

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் மற்றும் குலதெய்வக் கோயில்களுக்கு பக்தா்கள் குடும்பத்துடன் திரளாக வந்து வழிபட்டனா்.

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபட்டனா். மேலும், அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் பக்தா்கள் புனித நீராடினா். எனினும், காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு மாலை 5 மணிக்குள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா தலைமையில் அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் வனச்சரகங்களிலிருந்து வனவா்கள், வனக்காப்பாளா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com