ரமலான் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, தாழையூத்து, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, வள்ளியூா், துலுக்கா்பட்டி, திசையன்விளை, ஆத்தங்கரைபள்ளி, ஏா்வாடி, களக்காடு உள்பட மாவட்டம் முழுவதும் ஏழை-எளிய மக்களுக்கு பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டன. ரூ.4 லட்சம் மதிப்பிலான நலஉதவிகள் 2000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலப்பாளையம் 49 ஆவது வாா்டு கிளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாா்டு தலைவா் சிராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ்.ரசூல்மைதீன் பித்ரா பொருள்களை வழங்கி தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் மைதின் பாதுஷா, காஜா, ரியாஸ், யூசுப் சுல்தான், சேக்மதாா், ஞானியாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். வாா்டு செயலா் ரிபாய் நன்றி கூறினாா்.