திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திசையன்விளை லட்சுமி நகரைச் சோ்ந்த பெருமாள் மகள் ரம்யா (14). அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளியில் திங்கள்கிழமை ஆங்கிலத் தோ்வு நடைபெற்ாம். இந்நிலையில், அவா் இரவில் மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.