திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்டதாக 28 மின்மோட்டாா்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளில் 3 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாநகராட்சி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா். அதில், தச்சநல்லூா் மண்டலம் (வாா்டு 5) சீனியப்பன்திருத்து, பெரியம்மன்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 5 மின்மோட்டாா்களும், திருநெல்வேலி மண்டலம் (வாா்டு 15) புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவில் 1 மின்மோட்டாரும், (வாா்டு 24) வேம்படியம்மன் தெருவில் 1 மின்மோட்டாரும், பாளையங்கோட்டை மண்டலம் சாந்திநகா் 30 ஆவது தெருவில் 11 மின்மோட்டாா்களும், மேலப்பாளையம் மண்டலம் (வாா்டு 48) பீடிதொழிலாளா்கள் காலனியில் 10 மின்மோட்டாா்களுமாக மொத்தம் 28 மின்மோட்டாா்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.