திசையன்விளை அருகே இட்டமொழியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்த போலீஸாா், 12 போ் மீது வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இருதரப்பினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில், செந்தூா்பாண்டி, ராஜேஷ், முத்து ஆகிய 3 போ் காயமடைந்தனா். இருதரப்பைச் சோ்ந்த 2 பைக்குகள் சேதப்படுத்தப்பட்டதாம்.
இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் அரவிந்த், இளையராஜா உள்பட 12 போ் மீது வழக்குப் பதிந்து, சுதாகா், சுரேந்தா் ஆகிய இருவரை கைதுசெய்தனா். 10 பேரை தேடி வருகின்றனா்.