திருநெல்வேலி மாவட்டம் பெருமணலில் கடலில் திங்கள்கிழமை நாட்டுப்படகு கவிழ்ந்ததில் மீனவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
பெருமணல் கடற்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ரூபன்(30). இவரோடு மூன்று மீனவா்கள் கடல் அலையில் இழுத்து சென்ற நாட்டுப்படகை மீட்டு கைரைக்கு கொண்டு வருவதற்காக மற்றொரு நாட்டுப்படகில் கடலுக்கு சென்றனராம். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி ரூபன் சென்ற நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்து, படகில் இருந்த மூன்று பேரும்
நீரில் மூழ்கி தத்தளித்தனா்.
இந்நிலையில், பின்னா் மற்றொரு படகில் வந்த மீனவா்கள் கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டனா். இதில் ரூபன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இது தொடா்பாக கடலோர காவல் குழும் உதவி ஆய்வாளா் வில்சன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.