பேரறிவாளன் விடுதலைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் காங்கிரஸாா் வியாழக்கிழமை அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, மாநகா் மாவட்ட தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். இதில், பேரறிவாளன் விடுதலைக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸாா் தங்களின் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், முன்னாள் மாவட்ட தலைவா் சுந்தர்ராஜ பெருமாள், மாவட்ட பொதுச் செயலா்கள் சொக்கலிங்க குமாா், வழக்குரைஞா் துரை.செந்தில்குமாா், பாக்கியகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் உதயகுமாா், வெள்ளை பாண்டியன், கவி.பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.