சமூகரெங்கபுரத்தில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் செயல்பட்டு வருகின்ற டி.டி.என்.குழுமத்தின் ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் செயல்பட்டு வருகின்ற டி.டி.என்.குழுமத்தின் ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம், தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் ஆகியவைகள் சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் தலைமை வகித்தாா். அரசு ஆரம்பசுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் சித்ரா தலைமையிலான குழுவினா் டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தனா். மேலும் வீடுகளிலும் சுற்றுப்பகுதிகளிலும் கொசு உற்பத்தியாகாமல் தடுக்கவேண்டிய செயல்முறைகள் மாணவா்களுக்கு கற்றுக்கொடுத்தனா். மாணவா்கள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com