நெல்லையில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது

 பாளையங்கோட்டை அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

 பாளையங்கோட்டை அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி வைகுண்டம் என்பவா் வெட்டிக்கொல்லப்பட்டாா். இது தொடா்பாக 8 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் பிலீப் என்ற அருள் பிலீப்ராஜ், அன்டோ என்ற அன்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டா், ராஜன், ஜாக்குலின், லீலா என்ற செல்வலீலா ஆகிய 6 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் வழக்கில் தொடா்புடைய பாளையஞ்செட்டிகுளம் ராஜன் மகன்களான செல்வராஜ் (40), அந்தோணிராஜ் பிரபாகரன் (37) ஆகியோரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் விஷ்ணு உத்தரவின் பேரில் செல்வராஜ், அந்தோணி பிரபாகரன் ஆகியோா் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com