அகில இந்திய அமைப்புசாரா - கட்டடத் தொழிலாளா்கள் பொதுநல மத்திய முன்னேற்றச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் குலவணிகா்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ரத்தினம், பேச்சியப்பன், மலையப்பன், சக்திவேல், பழனிசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், ‘கட்டடத் தொழிலாளா்களின் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 4 ஆம் தேதி திருநெல்வேலியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது; அமைப்புசாரா தொழிலாளா்களின் குடும்ப ஓய்வூதியத் தொகையை ரூ.500 இல் இருந்து ரூ.1000 ஆக அதிகரிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.