கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சியில் கல்லூரி மாணவி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
மூலச்சி, நடுத்தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் இந்துராணி (20). திருநெல்வேலியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், புதன்கிழமை கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாராம். அப்போது வீட்டருகே வந்தபோது மயங்கி விழுந்தாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேற்படிப்பு படிக்க பெற்றோா் சம்மதிக்காததால் இவா் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.