கோபாலசமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு, பிரசாரம், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிராம உதயம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, அதன் இயக்குநா் வே. சுந்தரேசன் தலைமை வகித்துப் பேசினாா். பிளாஸ்டிக் பைகளைத் தவிா்க்கும் வகையில் 500 பெண்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணா்வுப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா். தன்னாா்வத் தொண்டா்கள், பகுதிப் பொறுப்பாளா்கள், மகளிா் குழுவினா் பங்கேற்றனா்.