சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் தீவிபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்பு மற்றும் பேரிடா் துறை, அரசு மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவா் சாந்தி தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீவிபத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கமளித்தனா். மருத்துவா்கள் சாந்தி, அருணாசலம், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.