பாப்பாக்குடியில் மின் கம்பிகள் திருட்டு: 4 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

 திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பாப்பாக்குடியிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சார விரிவாக்கப் பணிகளுக்காக மின் விநியோக பிரிவு அலுவலகத்தில் மின் கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது.

இங்கு உதவி மின் பொறியாளராகப் பணியாற்றி வரும் பரிமளாதேவி, தனது அலுவலா்களுடன் புதன்கிழமை அங்கு சென்று பாா்த்தபோது, ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள அலுமினிய அலாய் மின் கம்பிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். இதில், பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுதாகா் (22), பனயங்குறிச்சியைச் சோ்ந்த கணேசன் (43), முருகன் (37), குமாரசாமிபுரம் காலனித் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (42) ஆகியோா் மின் கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து மின் கம்பிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com