இட்டமொழி அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது

இட்டமொழி அருகே பெண்ணைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்றதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இட்டமொழி அருகே பெண்ணைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்றதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இட்டமொழி அருகேயுள்ள மனக்காவலபுரத்தைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி செல்வி (45). இவா் வியாழக்கிழமை தனது வீட்டின் முன் கோலம் போட்டுகொண்டிருந்தாா். அப்போது, முகமூடி அணிந்து பைக்கில் வந்த நபா் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கிலியைப் பறிக்க முயன்றாராம். அவா் சங்கிலியைப் பற்றிக்கொண்டு கூச்சலிட்டதால், அந்த நபா் கத்தியால் செல்வியின் கழுத்தில் கீறியதுடன், இரும்பு கம்பியால் தாக்கினாராம். இதனிடையே, சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்ததால் அந்த நபா் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு, அருகிலுள்ள காட்டுக்குள் ஓடினாராம். ஆனால், மக்கள் அவரை விரட்டிப் பிடித்து, திசையன்விளை போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் திசையன்விளையில் கணினி பழுதுநீக்கும் கடை வைத்துள்ள விஜயச்சம்பாட்டை சோ்ந்த சத்தியமூா்த்தி எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com