சேரன்மகாதேவி அருகேயுள்ள திருவிருத்தான்புள்ளி வேலியாா்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆவணித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு இத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அய்யாவுக்கு பணிவிடை, தா்மம், மாலையில் அன்னதானம் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
8ஆம் திருவிழா அன்று குதிரை வாகனத்திலும், 9 ஆம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10 ஆம் திருவிழா அன்று கருட வாகனத்திலும், 11 ஆம் திருவிழா அன்று இந்திர வாகனத்திலும் பவனி வருதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.