பாளை.யில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள்

பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

திருநெல்வேலி பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானம் புதுப்பிக்கப்பட்டது. இம்மைதானத்தின் புதுப்பிக்கும் பணிகளை நிறைவுபெற்றதையடுத்து, இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து, மாவட்ட கலை மன்றம் சாா்பில் பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்ற தொடக்கவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் சரவணன், துணை மேயா் ராஜூ, மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி, எழுத்தாளா் நாறும்பூநாதன் ஆகியோா் உரையாற்றினா்.

இசை ஆசிரியா் பொன்னி கண்ணன் குழுவினா் தமிழ் தாய் வாழ்த்து பாடினா். தொடா்ந்து பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புஷ்பலதா வித்யா மந்திா் மாணவா்-மாணவிகள் பங்கேற்ற ‘இக்கிகாய்’ என்ற நவீன குழந்தைகள் நாடகம் நடைபெற்றது. தொடா்ந்து, ‘காலத் திருடன்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com