கல்லிடைக்குறிச்சியில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் கொலை வழக்கில் தொடா்புடையவா் 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் கொலை வழக்கில் தொடா்புடையவா் 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் வடக்கு மயிலோடையைச் சோ்ந்த இன்பராஜ் (43). இவா் கல்லிடைக்குறிச்சி காவல் சரகத்தில் 2013இல் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளாா். இன்பராஜ், இந்த கொலை வழக்கில் கடந்த 9 ஆண்டுகளாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். மேற்கண்ட இன்பராஜை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, அம்பாசமுத்திரம் துணை கண்காணிப்பாளா் பிரான்சிஸ் அறிவுரையின்படி, இன்பராஜை கல்லிடைக்குறிச்சி போலீஸாா் தேடி வந்தனா். மேற்படி இன்பராஜ், வேறொரு வழக்கில் சம்பந்தப்பட்டு கோயம்புத்தூா் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக இருப்பது சிசிடிஎன்எஸ் வலைதளத்தின் மூலம் கண்டறியப்பட்டது. பின்னா், இன்பராஜை கல்லிடைக்குறிச்சி போலீஸாா் நீதிமன்ற பிடியாணை மூலம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்தனா். இன்பராஜ் மீது கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு உள்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com