களக்காடு அருகே உள்ளாட்சித் தோ்தல் முன்விரோதத்தில் 3 பேரைத் தாக்கியதாக தந்தை, 2 மகன்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கத்துரை மகன் முத்துக்குமாா் (28). இவரது அண்ணன் முத்துராஜூம், அதே பகுதியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் பிரவினும் கடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டனா். இதில் முத்துராஜ் வெற்றி பெற்றாா். இதில், இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், முத்துக்குமாா், உறவினா்கள் அனந்தகிருஷ்ணன், கணேசன் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த பிரவின், அவரது சகோதரா் ராபின்சன், தந்தை லெட்சுமணன் ஆகியோருக்குமிடையே வாய்த்தகராறு முற்றியதில், 3 பேரும் சோ்ந்த முத்துக்குமாா், அனந்தகிருஷ்ணன், கணேசன் ஆகிய 3 பேரையும் தாக்கிக் காயப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.