சேரன்மகாதேவியில் வேன்-பைக் மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் மேலூா் பகுதியைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் சுந்தரராஜன் என்ற சுரேஷ் (24). இவா் வெள்ளிக்கிழமை பைக்கில் சேரன்மகாதேவிக்கு வந்து விட்டு பாளையங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தாராம்.
சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி அருகே சென்றபோது, சேரன்மகாதேவி நோக்கி வந்த வேன் பைக் மீது மோதியதாம். இதில் சுந்தரராஜன் என்ற சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.