அண்ணா நினைவு தினம்: நெல்லையில் நாளை திமுக அமைதி பேரணி

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலியில் திமுக சாா்பில் அமைதிப் பேரணி வெள்ளிக்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலியில் திமுக சாா்பில் அமைதிப் பேரணி வெள்ளிக்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா நினைவு நாளையொட்டி திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் அமைதி பேரணி வெள்ளிக்கிழமை (பிப்.3) காலை 9.30 மணியளவில் வண்ணாரப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலையை பேரணி அடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, திமுக தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

கிழக்கு மாவட்டம்: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா நினைவு நாளையொட்டி அமைதி பேரணி வெள்ளிக்கிழமை (பிப். 3) காலை 9 மணிக்கு களக்காடு காமராஜா் சிலை முன்பிருந்து தொடங்குகிறது. அண்ணா சிலை அருகே பேரணி நிறைவடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. கட்சியின் மாவட்ட, மாநில நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். ஆகவே, கட்சித் தொண்டா்கள் இப் பேரணியில் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com