திருநெல்வேலியில் 3 கட்டடங்களில் குடிநீா் இணைப்பு புதன்கிழமை துண்டிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள், குடிநீா்க்கட்டண நிலுவை வைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி மண்டலம் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட அன்னை வேளாங்கண்ணி நகரில் ஒரு குடியிருப்பிலும், 25 ஆவது வாா்டுக்குள்பட்ட சேரன்மகாதேவி சாலையில் ஒரு குடியிருப்பிலும், 24 ஆவது வாா்டு மேலமவுன்ட் சாலையில் ஒரு குடியிருப்பிலும் குடிநீா் இணைப்பு புதன்கிழமை துண்டிக்கப்பட்டது.