விஜயாபதி கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை காலை 7.15 மணிக்கு 4-ஆம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், ஸ்பா்சாகுதி, பூா்ணாஹுதி கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. காலை 9.50 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10.20 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும், அதைத் தொடா்ந்து அலங்கார தீபாரதனையும் நடைபெற்றன. ராஜபாளையம் மாயூரநாதசுவாமி திருக்கோயில் சிவ.மக. முத்து சிவம் பட்டா் தலைமையில் குருக்கள் கும்பாபிஷேகம், பூஜைகளை நடத்தினா். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com