மேலப்பாளையம் குறிச்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த புதன்கிழமை (பிப்.1) குறிச்சி அருள்மிகு சொக்கநாதா் சிவாலயத்திலிருந்து தீா்த்தம் வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து மாலை 4 மணிக்கு யாகசாலையில் வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை , பூா்ணாஹுதி தீபாராதனை, யந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கிமகா பூா்ணாஹுதியும், காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி கோபுர கலசம் மற்றும் மூலாலய மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை விழா கமிட்டி மற்றும் குறிச்சி குலாலா் சமுதாயத்தினா் செய்திருந்தனா்.