மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
மணிமுத்தாறு மற்றும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் புதன்கிழமை மாலை முதல் கனமழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் செண்பகப்ரியா வெள்ளிக்கிழமை காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து அறிவித்தாா். நீா்வரத்து குறையும் வரை தடை நீடிக்கும், பயணிகள் அருவியைப் பாா்வையிடலாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.