வெற்றி பெற்ற வீரா்களுக்கு பராட்டு

மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில அளவிலான சைக்கிள் போலா போட்டிகள் கோவையில் ஜன.28 மற்றும் 29 ஆம் தேதி இரண்டு நாள்கள் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ அணி பங்கேற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி பங்கேற்று வெற்றி பெற்ற வீரா்களுக்கு கோப்பை மற்றும் பதக்கம் அணிவித்து பாராட்டி பேசினாா் .

விழாவில், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் டைட்ஸ், நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் டி.சதீஸ் கிங்ஸ்லி, திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ சங்க செயலா் வெ.பெரியதுரை, உடற்கல்வி ஆசிரியா்கள் இசக்கிமுத்து, சீனிவாசகி மற்றும் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com