திருநெல்வேலி ஆவின் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி ஆவின் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் இம்மானுவேல் தலைமை வகித்தாா்.
மேலும் அவா் கூறியதாவது: 7 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம் . ஆனால் தமிழக அரசு மற்றும் ஆவின் நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தாமதப்படுத்தினால் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.
இந்தப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் அனைத்து பிரிவு கூட்டமைப்பினா் கலந்து கொண்டனா்.