பழையபேட்டையில் போராட்டம்

தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலா் சங்கம் சாா்பில் பழைய பேட்டையில் உள்ள திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலா் சங்கம் சாா்பில் பழைய பேட்டையில் உள்ள திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு ஜனவரி மாத ஊதியம் உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உள்ளிருப்பு போராட்டத்துக்கு, சங்கத்தின் மண்டல தலைவா் ஜெயபால் தனசிங், தேசிய செயலா் மகாராஜன், மண்டல செயலா் கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். தொடா்ந்து மாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு (மூட்டா) ஆசிரியா் சங்கத் தலைவா்கள் ஐசக் அருள்தாஸ், ஹெய்ஸ்தாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் நசீா் அகமது, கலைவாணன், கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com