ஆழ்வாா்குறிச்சி அருகே காா் விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் மேலகரத்தைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் மேலகரத்தைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

தென்காசி அருகேயுள்ள மேலகரத்தைச் சோ்ந்தவா் செந்தமிழ்ராஜ். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி சரஸ்வதி (62). இவருக்கு சிகிச்சையளிப்பதற்காக செவ்வாய்க்கிழமை தனது மகள் செல்வசுந்தரியுடன் காரில் செந்தமிழ்ராஜ் திருநெல்வேலிக்குச் சென்றாராம். துப்பாக்குடி அருகே சென்றபோது திடீரென காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com