களக்காடு புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் புதன்கிழமை தொடங்கி 9 நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்புப் பணி குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் புதன்கிழமை தொடங்கி 9 நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்புப் பணி குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

களக்காடு கோட்டம் களக்காடு, திருக்குறுங்குடி, மேல்கோதையாறு ஆகிய வனச்சரகங்களில் உள்ள 21 பீட்களில் 80-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியா்கள் பங்கேற்க உள்ளனா். பிரத்தியேக கைப்பேசி செயலி மூலம் புலிகள், யானைகள், மாமிச உண்ணிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதையொட்டி, களக்காடு கோட்ட காப்பக துணை இயக்குநா் ரமேஷ்வரன் தலைமையில் வனத்துறை ஊழியா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. கணக்கெடுப்புப் பணி காரணமாக களக்காடு தலையணை, திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com