பாப்பாக்குடி ஒன்றியம், வழுதூரில் 150 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வழுதூா் ஊராட்சி, பசுமை தோழா்கள் அறக்கட்டளை, அகத்திய அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலம் தலைமை வகித்து, மரக்கன்றை நட்டு பணியைத் தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவி கஸ்தூரி முன்னிலை வகித்தாா். பசுமை தோழா்கள் அறக்கட்டளை நிறுவனா் சுப்புராஜ், ஊராட்சி துணைத் தலைவா் இசக்கிபாண்டியன், ஊராட்சிச் செயலா் காந்திமதி, இஸ்மாயில், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.