செய்தித்துறை சாா்பில் புகைப்படக் கண்காட்சி

பொருநை நெல்லை புத்தகக் கண்காட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாண்டி’” என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பொருநை நெல்லை புத்தகக் கண்காட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாண்டி’” என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் பங்கேற்ற, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தாா். பின்னா், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை சட்டப்பேரவைத் தலைவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையா்) சுகன்யா, செய்தி, மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) அ. கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com