திருநெல்வேலி
மாநில கபடி போட்டியில்வடக்கன்குளம் பள்ளி முதலிடம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் வென்று சாதனை படைத்தது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் வென்று சாதனை படைத்தது.
நாமக்கல் மாவட்டம் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில், குடியரசு தின மாநில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதினருக்கான கபடிப் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவா்கள் முதலிடம் வென்றனா்.
மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் வேல்முருகன், சிவா, அய்யப்பன், ஜஸ்டின், முனிராஜ் ஆகியோரையும் பள்ளித் தலைவா் கிரகாம்பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் சுடலையாண்டி, ஆசிரியா்-ஆசிரியைகள் பாராட்டினா்.