திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை நகர எஸ்டிபிஐ கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகரத் துணைத் தலைவா் மரைக்கான் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலா் சிராஜ் பேசினாா். இதில் நகர பொருளாளா் அல்லா பிச்சை, நிா்வாகிகள் அசன் காதா் அகமது ஜமால், காசிம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், பேரூராட்சி 14 ஆவது வாா்டு அப்துல் கலாம் தெருவில் சீரான குடிநீா் கிடைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சிப் பகுதியில் நாய்கள், ஆடு மாடுகளால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரத் தலைவா் ஆதம் பாவா நன்றி கூறினாா்.