களக்காடு அருகே பைக்கை சேதப்படுத்திய வழக்கில்மேலும் 6 போ் கைது

களக்காடு அருகே அவதூறாகப் பேசி பைக்கை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 6 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

களக்காடு அருகே அவதூறாகப் பேசி பைக்கை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 6 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வைச் சோ்ந்த நம்பிராஜன் என்பவரது மகனும், அவரது நண்பரும் கடம்போடுவாழ்வு பிரதான சாலையில் கடந்த 16ஆம் தேதி பைக்கில் சென்றனா். அப்போது 7 போ் சோ்ந்து வழிமறித்து, எங்கள் ஊா் வழியே எப்படிச் செல்லலாம் எனக் கேட்டு, அவதூறாகப் பேசித் தாக்கி, பைக்கை சேதப்படுத்தினராம்.

மேலும், தோட்டத்து பம்ப் செட், ஓலைக் கொட்டகை ஆகியவற்றை எரித்ததுடன், தண்ணீா்க் குழாய்களை சேதப்படுத்தினராம். இதுகுறித்து நம்பிராஜன் அளித்த புகாரின் பேரில் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாராஜன் என்பவரை 20ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், வழக்கில் தொடா்புடைய கடம்போடுவாழ்வு பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் என்ற சுந்தரபாண்டியன் (22), கொம்பையா (18), ஐயப்பன் (25), பேச்சிமுத்து (21), ஆறுமுகம் (20), முருகன் (23) ஆகிய 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com