மரக்கன்றுகள் நடும் விழா

திருநெல்வேலி நகரத்தில் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருநெல்வேலி நகரத்தில் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழக நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் மற்றும் ஆணையா் உத்தரவின்படி மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ‘பொது இடங்களில் பெருமளவில் மரம் நடுதல்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருநெல்வேலி மாநகர நல அலுவலா் சரோஜா அறிவுரையின்படி திருநெல்வேலி நகரத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. வேம்பு, புங்கை, புளி உள்ளிட்ட பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் இளங்கோ, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா், பரப்புரையாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com