திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் திங்கள்கிழமை தீண்டாமை உறுதிமொழியேற்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர ஆணையா் அலுவலகத்தில், காவல் ஆணையா் ராஜேந்திரன் தலைமையில் மெளன அஞ்சலி மற்றும் உறுதிமொழியேற்கப்பட்டது.
இதில், காவல் துணை ஆணயா்கள் வி.ஆா். ஸ்ரீனிவாசன் (கிழக்கு), கே. சரவணக்குமாா் (மேற்கு ) மற்றும் காவல் துறை அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மாரிராஜன் , மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு ஆகியோா் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா்.