முக்கூடலில் முதியவா் வெட்டிக் கொலை‘:உறவினா்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் முதியவா் வெள்ளிக்கிழமை இரவில் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் முதியவா் வெள்ளிக்கிழமை இரவில் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முக்கூடல் பாண்டியாபுரம் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் தனது வீட்டின் முன் பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்தாா். வெள்ளிக்கிழமை இரவில் ஆறுமுகம் கோழிக் கடையில் இருந்தபோது, அங்கு ஒரே பைக்கில் முகமூடி அணிந்து வந்த மூவா் கடைக்குள் புகுந்து ஆறுமுகத்தை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா் ஆறுமுகம் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதனிடையே, ஆறுமுகத்தின் உறவினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஆலங்குளம், முக்கூடல் - பொட்டல்புதூா் சந்திக்கும் பிரதானச் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், திருநெல்வேலி - பொட்டல்புதூா் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் அவா்கள் தொடா்ந்து 2 மணிநேரத்துக்கு மேலாக மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com