இன்று நடைபெறவிருந்த சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி ஒத்திவைப்பு

திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) நடைபெறவிருந்த சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) நடைபெறவிருந்த சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி அமைப்பாளா் மு.கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையத்தின் சாா்பில் 7-ஆவது தொகுப்பு பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது தவிா்க்க இயலாத காரணங்களால் வரும் 18-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com