சாலைப் பணியால்போக்குவரத்து பாதிப்பு:மக்கள் மறியல் முயற்சி

வீரவநல்லூா் அருகே சாலை விரிவாக்கப் பணியால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனா்.

வீரவநல்லூா் அருகே சாலை விரிவாக்கப் பணியால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனா்.

பாளையங்கோட்டை - அம்பாசமுத்திரம் பிரதானச் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வீரவநல்லூா் அருகேயுள்ள காருக்குறிச்சி பகுதியில் 2 இடங்களில் பாலம் கட்டும் பணியும், சாலையோரமாக கழிவுநீா் ஓடை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், பாலம் கட்டும் பணிக்காக சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டிருப்பினும், அப்பகுதியில் விபத்துகள் நேரிட்டு வருகின்றன. அண்மையில் மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், அங்கு தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து உயிரிழந்தாா். சாலையோர கழிவுநீரை கட்டுப்படும் நிலையில் மாற்றுப் பாதை இல்லாமல் பணிகள் நடைபெற்று வந்ததாம். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் புதன்கிழமை இரவு பிரதானச் சாலையில் மக்கள் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com