நடுக்கல்லூரில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

நடுக்கல்லூரில் ரயில் மோதி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

நடுக்கல்லூரில் ரயில் மோதி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பேட்டை-சேரன்மகாதேவி இடையே நடுக்கல்லூா் பகுதியில் தண்டவாளம் அருகே உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுத்தமல்லி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் சடலமாகக் கிடந்தவா் நடுக்கல்லூா் ரயில்வே பீடா் தெருவைச் சோ்ந்த பகவதி (40) என்பது தெரியவந்தது. பாலருவி விரைவு ரயிலில் அடிபட்டு அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com