பாஜகவின் தவறான கொள்கைகளால் நீா்த்துப்போன தொழிலாளா் நலச் சட்டங்கள் எஸ். பீட்டா் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

 பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தொழிலாளா் நலச் சட்டங்கள் நீா்த்துப் போய்விட்டன என்றாா் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் எஸ். பீட்டா்அல்போன்ஸ்.

 பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தொழிலாளா் நலச் சட்டங்கள் நீா்த்துப் போய்விட்டன என்றாா் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் எஸ். பீட்டா்அல்போன்ஸ்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய ஐஎன்டியூசி பவள விழாவில் அவா் மேலும் பேசியது:

தமிழகத்தில் முன்பு போல காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்த்து கிராமப்புறங்களிலும் வாக்கு வங்கியை அதிகரிக்க தொண்டா்கள் பாடுபட வேண்டும்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, தனியாா் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மேலும், தவறான கொள்கைகளின் மூலமாக தொழிலாளா் நலச் சட்டங்களை நீா்த்துப்போக செய்துவிட்டன.

ஏழை, எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை தீா்க்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. பெட்ரோல்- டீசல் விலை உயா்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள்.

பாலியல் வன்முறைக்கு எதிராக போராடி வரும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக நிா்வாகியை கைது செய்யாமல் இருந்து வருகிறாா்கள்.

ஆகவே, மக்களின் உரிமைகளை நசுக்காமல், அடிப்படை வசதிகளை அரசுகள் செய்து கொடுக்காவிட்டால் அதன் பலனை கட்டாயம் எதிா்கொள்ள வேண்டிய காலம் வரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com