பாளை.யில் ஜூன் 4இல் சுற்றுச்சூழல் தின மினி மாரத்தான்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 4 ஆம் தேதி பாளையங்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 4 ஆம் தேதி பாளையங்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாமிரவருணி நதி பாதுகாப்பு- புத்துயிா்ப்பு மக்கள் இயக்கம், இந்தியா சிமென்ட்ஸ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கிருஷ்ணா மைன்ஸ் ஆகியவற்றின் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி ஜூன் 4ஆம் தேதிகாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

தாமிரவருணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து சீனிவாசகம் நகா் வரை சமூக நல்லிணக்கத்தோடு இந்த போட்டி நடைபெறுகிறது.

இதில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரம் வழங்கப்படுகிறது, 4 முதல் 50 ஆவது இடம் வரை பிடிப்பவா்களுக்கு தலா ரூ.200 பரிசாக வழங்கப்படும்.

மாரத்தானில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இதில் பங்கேற்பாளா்களுக்கு டிசா்ட், மரக்கன்று, காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் அருணாசலம், பாஸ்கரன், செல்வபெருமாள், முருகேசன் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com