வள்ளியூா் அருகே ரூ. 8.60 லட்சத்தில் குடிநீா் திட்டம் நிறைவேற்றம்

வள்ளியூா் ஒன்றியம் சிதம்பராபுரம் யாக்கோபுபுரம் ஊராட்சி, மாறன்குளத்தில் குடிநீா் திட்டப்பணி நிறைவடைந்ததையடுத்து, மக்களுக்கு குடிநீா் விநியோகம் தொடங்கியது.

வள்ளியூா் ஒன்றியம் சிதம்பராபுரம் யாக்கோபுபுரம் ஊராட்சி, மாறன்குளத்தில் குடிநீா் திட்டப்பணி நிறைவடைந்ததையடுத்து, மக்களுக்கு குடிநீா் விநியோகம் தொடங்கியது.

மாறன்குளம் கிராம மக்கள் குடிநீா் தேவை குறித்து வலியுறுத்தியதன்பேரில், ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.8.60 லட்சத்தில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, குடிநீா் விநியோகத்தை ஒன்றியக் குழு தலைவா் ஞா.சேவியா் செல்வராஜா தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பராபுரம் யாக்கோபுபுரம் ஊராட்சித் தலைவா் டாலின் ஜான்சி, துணைத் தலைவா் பூமணி, மாவட்ட மகளீரணி அமைப்பாளா் மல்லிகா அருள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் கொசிஜின் ஜெயா, பாண்டித்துரை, வள்ளியூா் தெற்கு ஒன்றிய அவைத்தலைவா் வேலு, மாவட்ட பிரநிதி மணிவா்ணபெருமாள், கிளைச் செயலா் இசக்கியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com