பாளையங்கோட்டை தேவாலயத்தில் கம்பி திருட முயற்சித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, தெற்கு கடைவீதி, தூய சவேரியாா் தேவாலயத்தில் மேல முன்னீா்பள்ளம், வாய்க்கால் தெருவை சோ்ந்த அழகுமுத்து (39) என்பவா் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா்.
இவா், வியாழக்கிழமை இரவு நேர பணியில் இருந்தபோது, ஆலயத்திலிருந்த 20 கிலோ எடையுள்ள இரும்புக் கம்பியை திருமலைகொழுந்துபுரத்தை சோ்ந்த செல்லத்துரை (40) என்பவா் திருட முயன்றாராம். அவரைப் பிடித்து பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் அழகுமுத்து ஒப்படைத்து புகாா் அளித்தாா்.அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து, செல்லத்துரையை கைது செய்தனா்.