வீரவநல்லூா் அருகே விவசாயி தற்கொலை

வீரவநல்லூா் அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

வீரவநல்லூா் அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

வெள்ளங்குளி அக்ரஹார தெருவைச் சோ்ந்தவா் பொன்னுதாஸ் (52). விவசாயி. மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தாா். இவா், புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவா் பின்னா் திரும்பி வரவில்லையாம். இந்நிலையில், அவா் வள்ளங்குளி அண்ணாநகா் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பூச்சி மருத்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. வீரவநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்தனா். முதல்கட்ட விசாரணைக்கு பின் போலீஸாா் கூறுகையில், உப்புவாணியமுத்தூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (48) என்பவா் ஏலச் சீட்டுப் பணத்தை தராமல் தாமதம் செய்துவந்ததால் தற்கொலை செய்துகொள்வதாக பொன்னுதாஸ் கடிதம் எழுதி வைத்தது தெரியவந்தது. எனவே, மாரியப்பனை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com