திருநெல்வேலி
ராகுல்காந்தி வருகை: நெல்லையில் 3 நாள்கள் ட்ரோன்களுக்கு தடை
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி எம்.பி.யின் வருகையையொட்டி, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழன்,வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப். 11-13) ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர ராபா்ட் புரூஸை ஆதரவாக வாக்கு சேகரிக்கும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அவா் ஏப். 12 இல் பாளையங்கோட்டைக்கு வருகிறாா். இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக, திருநெல்வேலி மாநகர பகுதியில் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை (ஏப்.11-13) ட்ரோன்கள் பறக்க விடை தடை விதிக்கப்படுகிறது என திருநெல்வேலி மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.