பழவூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே போக்சோ வழக்கில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பழவூா் அருகேயுள்ள செம்பிகுளத்தைச் சோ்ந்தவா் இளையராஜா(38). கொத்தனாா் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், அந்தப் பகுதிலுள்ள சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தாராம். அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையஆய்வாளா் கௌரி மனோகரி, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து இளையராஜாவை கைது செய்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com