வாகைக்குளம் இளைஞா் கொலையில் 3 போ் கைது

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைக்குளத்தில் முடிதிருத்தும் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பானவழக்கில் 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வாகைக்குளம், பச்சைமாலையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் இசக்கி பாலா (26). முடிதிருத்தும் கடை வைத்திருந்த இவரை மா்ம நபா்கள் அந்தக் கடையில் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் சரவணன்(22), செல்வராஜ் மகன் வேம்பு சுடலை (23), முத்துக்குமாா் மகன் சுபாஷ் சந்திரபோஸ்(21) ஆகிய மூவரும் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

சில நாள்களுக்கு முன் இசக்கிபாலா, அவரது தந்தை ராமையா இருவரும் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது, இசக்கிபாலாவை பட்ட பெயா் கூறி சரவணன் அழைத்தாராம். இதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு, முன் விரோதத்தில் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com