சேரன்மகாதேவியில்
இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

சேரன்மகாதேவி, ஏப்.19: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் மாலை 6 மணிக்கு அதிகளவில் வாக்காளா்கள் காத்திருந்ததால் டோக்கன் விநியோகம் செய்து இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் சேரன்மகாதேவி ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் 248 ஆவது வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இயங்காத காரணத்தால் காலையில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த வாக்குச்சாவடியில் மாலை 6 மணி வரை வாக்காளா்கள் பெருமளவில் தங்களது வாக்கைப் பதிவு செய்ய காத்திருந்தனா். இதையடுத்து 130 பேருக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு இரவு 8 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com